Breaking News

குடியரசு தலைவருடன் ஸ்டாலின் இன்று சந்திப்பு: நீட் தேர்வு, 7 பேர் விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க திட்டம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கடந்த ஜூன் 17-ம் தேதி டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தார். மறுநாள் 18-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோரையும் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wRnUkJ
via

No comments