Breaking News

கஞ்சா கடத்தியவர்களைப் பிடித்த தனிப்படை போலீஸாருக்கு ஆணையர் பாராட்டு

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த கும்பலைப் பிடித்த தனிப்படை போலீஸாரை நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டியுள்ளார்.

சென்னை பெருநகரில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கலைத் தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவொற்றியூர், பேசின் ரோடு மற்றும் மாட்டு மந்தை சந்திப்பில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வேகமாக வந்த ஆந்திர மாநில பதிவெண்கள் கொண்ட இரண்டு கார்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது கார்களில் வந்த 3 நபர்களும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். கார்களை பரிசோதித்தபோது, அதில் பெருமளவு கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36Jodn1
via

No comments