Breaking News

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையில் முதுகெலும்பு மறுவாழ்வு மையத்துக்கு அரசு சான்றிதழ்கள்: பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையில் ‘ஒருங் கிணைந்த முதுகெலும்பு மறுவாழ்வு மையம்’ செயல்படுவதற்கான அரசு சான்றிதழ்களை தொண்டு நிறுவனத்திடம் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று வழங்கினார்.

திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை மணக்குள விநாயகர் கோயில் தெருவில் வசிப்பவர் பிரீத்தி சீனிவாசன். நீச்சல் மற்றும் கிரிக்கெட் வீராங்கனையான இவர், தனது 18-வது வயதில் விபத்தில் சிக்கினார். அவரது முதுகெலும்பு பாதிக்கப்பட்டது. தன்னால் நடக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டபோதும், மனம் தளராமல் ‘SOUL FREE’ என்ற தொண்டு நிறுவனத்தை உருவாக்கி, அதன்மூலம் தன்னை போல் முதுகு தண்டுவடம் பாதிக் கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xFqoEc
via

No comments