வெங்கம்பாக்கத்தில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு சிதிலமடைந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க தடையில்லா சான்று வேண்டும்: ஆட்சியரிடம் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மனு

புதிய வகுப்பறைகள் கட்ட, சிதிலமடைந்த பள்ளி கட்டிடத்தை இடிப்பதற்கு தடையில்லா சான்று கோரி வெங்கபாக்கம் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத்திடம் மனு அளிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், வெங்கம்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. உயர்நிலைப் பள்ளியாக இருந்த இப்பள்ளி கடந்த 2013-14-ம் கல்வி ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, இப்பள்ளியில் 2021-22-ம் கல்வி ஆண்டில் 883 மாணவர்கள் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறைகளுக்கான தேவை ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rcO68b
via
No comments