கோவையில் ரோகன் போபண்ணா பயிற்சி மையம் தொடங்குவதால் டென்னிஸ் விளையாட்டின் தரம் சர்வதேச அளவுக்கு மேம்படும்: விளையாட்டு ஆர்வலர்கள், பயிற்சியாளர்கள் கருத்து

சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா கோவையில் பயிற்சி மையம் தொடங்குவது, விளையாட்டின் தரத்தை சர்வதேச அளவுக்கு மேம்படுத்த உதவும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் தனியார் பள்ளியுடன் இணைந்து, டென்னிஸ் பயிற்சி மையம் தொடங்கப் போவதாகவும், ஆகஸ்ட் மாதம் இதற்கான பணிகள் தொடங்கும் என்றும் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் விளையாட்டு வீர்களில் ஒருவரான ரோகன் போபண்ணா சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ySsaSs
via
No comments