Breaking News

கடலூர் மாவட்ட டெல்டா விவசாயிகளுக்கான குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் தொடக்கம்: குறிஞ்சிப்பாடியில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

குறிஞ்சிப்பாடியில் வேளாண்துறை சார்பில் டெல்டா விவசாயிகளுக்கான குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கலந்து கொண்டு குறுவை சாகுபடி தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினார்.

டெல்டா விவசாயிகளின் நலன் கருதி முதல்வர் ஸ்டாலின் ரூ.50 கோடியில் குறுவை சாகுபடி திட்டத்தை அறிவித்தார். அதன்படி கடலூர் மாவட்ட டெல்டா பகுதிக்கான குறுவை சாகுபடி திட்ட தொடக்க விழா நேற்று குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AoesZ3
via

No comments