கச்சா எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்ததால் அடையாறில் போக்குவரத்து நெரிசல்

மேடவாக்கத்திலிருந்து துறைமுகத்துக்கு டேங்கர் லாரி ஒன்று கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. அதை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராம்லால் (42) என்பவர் ஓட்டி வந்தார்.
நேற்று அதிகாலை 1 மணியளவில் டேங்கர் லாரி அடையாறு பகுதியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி எதிரே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்த கச்சா எண்ணெய் சாலையில் வழிந்து மழைநீர்போல் ஓடியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3igvSi3
via
No comments