உளுந்தூர்பேட்டை அருகே தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தலை மீறி போடப்படும் தார்சாலை

தலைமைச் செயலாளரின் அறிவு றுத்தலை மீறி உளுந்தூர்பேட்டை அருகே சாலை மட்டத்தை உயர்த்தி புதுப்பிக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நகர் முதல் நைனார்குப்பம் கிராமம் வரையிலான 1,200 மீட்டர் தார் சாலை புதுப்பிக்கும் பணி நெடுஞ்சாலைத் துறையால் இரு ஆண்டுக ளுக்கு முன்னரே ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இருப்பினும் பணிகள் நடைபெறாமல் இருந்துவந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் கிடப்பில் உள்ள பணிகளை செயல்படுத்த வேண்டும் எனக் கோரி அரசு அலுவலகங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். தொடங்காத ஒப்பந்த பணிகளை ரத்து செய்துவிட்டு, புதிய ஒப்பந்தம் கோரி, ஒப்பந்ததாரர்களை நியமிக்க வேண்டும் என நிர்ப்பந்தித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AYcVt6
via
No comments