Breaking News

‘ஆட்சி அமைத்த திமுக, அமைச்சரான செந்தில் பாலாஜி’- வேண்டுதல் நிறைவேறியதால் தீக்குளித்து உயிரை மாய்த்த போக்குவரத்து ஊழியர்

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய வேண்டிக் கொண்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர், நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக கோயில் முன்பு நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாவட்டம் லாலாபேட்டையைச் சேர்ந்தவர் சு.உலகநாதன்(60). அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தீவிரதிமுக அபிமானியான இவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிஅமைப்பதுடன், கரூர் தொகுதியில் வி.செந்தில்பாலாஜி வெற்றிபெற்று அமைச்சரானால் உயிரைத்தியாகம் செய்வதாக, செந்தில்பாலாஜியின் குலதெய்வக் கோயிலான, கரூர் மண்மங்கலம் புதுக்காளியம்மன் கோயிலில் வேண்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3huJmHJ
via

No comments