கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இளைஞர்களை உதாசீனப்படுத்தியதால் தோல்வி ஏற்பட்டது: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்அதிமுக நிர்வாகிகள் இளைஞர் களை உதாசீனப்படுத்தியதால் நாம் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டோம் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஒன்றி யங்களில் அதிமுக செயல் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நாட்றாம்பள்ளி ஒன்றியம், ஆத்தூர் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியச்செயலாளர் சாம்ராஜ் தலைமை வகித்தார். வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3khipZR
via
No comments