வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் புதுப்பிக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகம் திறப்பு: நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு தொகுதியின் எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் தலைமை வகித்தார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தார்.
திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்பாசனத்துறை அமைச் சருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ibajzl
via
No comments