Breaking News

கோவை மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 3 யானைகள் வேட்டையாடப்பட்ட சம்பவத்தில் 2 பேர் மீது சிபிஐ வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நடவடிக்கை

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் 3 யானைகள் வேட்டையாடப்பட்டது தொடர்பாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் யானைகள் உயிரிழப்பது தொடர்பாக கொடைக்கானல் எஸ்.மனோஜ் இமானுவேல், மதுரை ஆரப்பாளையம் முத்துச்செல்வம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதில், “யானைகள் கொல்லப்படுவது குறித்து மத்திய வன உயிரின குற்றத் தடுப்பு பிரிவு, மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) ஆகியவை சிறப்பு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்”என்று கோரியிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3j96mwR
via

No comments