Breaking News

சென்னை சாலைகளில் மழைநீர் தேங்குவதற்கு அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியின் அவலநிலைதான் முக்கிய காரணம்: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

சென்னையில் ஒரு நாள் மழைக்கு சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதற்கு, கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் அவலநிலை தான் காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட வளர்ச்சி குறித்த நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவரும், முன்னாள்மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில், மத்திய அரசு சார்பில் சென்னை மாநகர வளர்ச்சிக்காக தூய்மை இந்தியா திட்டம், அம்ரூத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி, அதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது. அதில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WgYMXR
via

No comments