ரூ.20 கோடிக்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் மஞ்சள் நீர்க் கால்வாய் சீரமைப்பு பணி
காஞ்சிபுரத்தில் மஞ்சள் நீர் கால்வாயில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் தேங்கி அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனை சீரமைக்க ரூ.20 கோடிக்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.
வேகவதி ஆற்றில் இருந்து பிரிந்து காஞ்சிபுரம் வழியாக ஓடும் மழைநீர் கால்வாய் மஞ்சள் நீர்க் கால்வாய். இந்த கால்வாய் தாமல், புத்தேரி, சாலபோகம் கிராமப்பகுதிகள் வழியாக வந்து காஞ்சிபுரம் நகராட்சியில் கைலாசநாதர் கோயில் பகுதி, கிருஷ்ணன் தெரு,காமராஜர் வீதி, ரயில்வே சாலை மற்றும் திருக்காலிமேடு பகுதி வழியாகச் சென்று நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது. இந்தக் கால்வாய் 20 அடி ஆழமும், 30 அடி அகலமும் கொண்டது. சுமார் 20 கி.மீ. தூரம் ஓடும் இந்தக் கால்வாயில் சாயப்பட்டறை கழிவுகள், அரிசி ஆலைக் கழிவுகள், பொதுமக்கள் சிலரின் வீட்டில் இருந்து செல்லும் கழிவுகள் விடப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jkRpXt
via
No comments