ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை: தரிசனத்துக்கு தடை விதித்ததால் பக்தர்கள் ஏமாற்றம்
ஆடிக் கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் நேற்றுசிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த பக்தர்கள், கோயிலுக்கு வெளியே நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாக்களில் ஆடிக் கிருத்திகை முக்கியமானது. தமிழகத்தில் உள்ள முக்கிய முருகன் கோயில்களில் ஆண்டுதோறும் ஆடிக் கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்படும். அந்த நாளில் பக்தர்கள் காவடி எடுப்பது, அலகு குத்துவது உள்ளிட்டநேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fpqh8l
via
No comments