திருமணமான 8 மாதங்களில் இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை
தாம்பரம் அருகே திருமணமான 8 மாதங்களில் இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை பனையூரைச் சேர்ந்தவர் பிரமோத்(25). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஸ்னேகா(19). இவர்களுக்குத் திருமணமாகி 8 மாதங்களாகின்றன. இந்நிலையில், வரதட்சணை கேட்டு மனைவி ஸ்னேகாவை கணவர் பிரமோத் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவருடன் கோபித்துக் கொண்டு, சேலையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு ஸ்னேகா வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CbzSJK
via
No comments