Breaking News

தமிழகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 55 இடங்களில் தடுப்பூசி மையங்கள் திறப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 55 இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கரோனா தடுப்பூசி மையம் அமைக்கப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான கோவாக்சின் மருந்துக்கு தட்டுப்பாடு உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று 24 மணி நேரமும் செயல்படும் கரோனா தடுப்பூசி மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BbcX01
via

No comments