Breaking News

மருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு 27% இடஒதுக்கீடு: முதல்வருக்கு பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் நன்றி

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான வி.ஈஸ்வரய்யா, சமூகப் புரட்சி கூட்டணித் தலைவர் நீதியரசர் வீரேந்திர சிங் யாதவ், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் ரஞ்சன் ராஜேஷ், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அவதேஷ் கர்சா, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பு செயல் தலைவர் ஹன்ஸ்ராஜ் ஜங்கரா, உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் ஸ்ரீகாண்ட் பால், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி மாணவர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்ஹா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசிடம் வலியுறுத்தி, பெற்றுத் தந்ததற்காக முதல்வருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் உடனிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2U08ixR
via

No comments