அம்மா உணவகத்துக்கு வழங்கிய காய்கறிக்கு ரூ.6 லட்சம் பாக்கி வைத்துள்ள தாம்பரம் நகராட்சி நிர்வாகம்

காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் பசுமை பண்ணை காய்கறி கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கடையில் இருந்து தாம்பரம் நகராட்சியில் செயல்படும் 2 அம்மா உணவகங்களுக்கு தேவையான காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில் தாம்பரம் நகராட்சி நிர்வாகம், காய்கறி வாங்கியதற்கான கட்டணத்தை பசுமை பண்ணை காய்கறி கடைகளுக்கு சரிவர செலுத்தாததால் காய்கறி வழங்குவது நிறுத்தப் பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jC4X0E
via
No comments