Breaking News

பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி 9-ம் தேதி ஆஜராக வேண்டும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றம் உத்தரவு

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், விழுப் புரம் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றம் முன்பு வரும் 9-ம் தேதி சிறப்பு டிஜிபி ஆஜராக உத்தர விடப்பட்டுள்ளது.

எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய முதல்வரின் பாது காப்புப் பணியில் இருந்துள்ளார். மேலதிகாரியான சிறப்பு டிஜிபி அவரது மாவட்டத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்துள்ளார். அப்போது அந்த பெண் எஸ்.பியை காரில் ஏறச்சொன்ன சிறப்பு டிஜிபி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jjLcuX
via

No comments