Breaking News

புகழேந்தியின் அவதூறு வழக்கு ரத்து கோரி ஓபிஎஸ், இபிஎஸ் மனு: அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

அதிமுக செய்தி தொடர்பாளரான பெங்களூரு வா.புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி கடந்தஜூன் 14-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் கூட்டாக அறிக்கைவெளியிட்டனர். இதன்மூலம் தனதுநற்பெயர், அரசியல் பொது வாழ்வுக்கு களங்கம் விளைவித்ததாக கூறி இருவருக்கும் எதிராக, எம்.பி.,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி அவதூறு வழக்குதொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு இருவரும் ஆகஸ்ட் 24-ம் தேதி(இன்று) நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ze3AvY
via

No comments