Breaking News

வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை: தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு

தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.

வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 14-ம் தேதிதாக்கல் செய்யப்பட உள்ளது. அதில், இயற்கை வேளாண்மைக்கு தனி கவனம், உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளித்தல், கிராம சந்தைகளை அமைப்பதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என முதல்வர்மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஆகும். தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை யை ஊக்குவிப்பதற்காக ஈஷா பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்ட ஈஷா விவசாய இயக்கத்தின் மூலம்தமிழ்நாடு முழுவதும் இதுவரை 10,000 விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jJskFR
via

No comments