Breaking News

தேங்காயை மதிப்புக்கூட்டும் பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்: தமிழ்நாடு வளர்ச்சி கொள்கைக் குழுவிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

தேங்காயை மதிப்புக்கூட்டும் பொருளாக மாற்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு துணைத் தலைவரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன் கோட்டை கிராமத்தில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் அமைந்துள்ள தென்னை வணிக வளாகத்தை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், தமிழ்நாடு வளர்ச்சிக் கொள்கைக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ ஆகியோர் நேற்றுமுன்தினம் ஆய்வு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mjmr5b
via

No comments