Breaking News

பம்ப்செட் உற்பத்தியில் நூறாண்டுகளில் இல்லாத தொழில் வீழ்ச்சி: அரசுக்கான கொள்முதலில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க எதிர்பார்ப்பு

அரசுக்கான மோட்டார் பம்ப்செட் கொள்முதலில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோவை மோட்டார் பம்ப்செட் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மோட்டார் பம்ப்செட், அவற்றுக்கான உதிரிபாகங்கள் உற்பத்தி சார்ந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் நேரடி ஆர்டர் பெறும் சிறு, குறு நிறுவனங்கள் என்ற அடிப்படையில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும், இத்துறை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களும் உள்ளனர். இங்கு அரை ஹெச்.பி. முதல் 20 ஹெச்.பி. வரையிலான மோட்டார் பம்ப்செட்டுகள் சிறு, குறு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் 500 ஹெச்.பி. வரையிலான பம்ப்செட்டுகளை தயாரிக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37ZTFhD
via

No comments