தூய்மைப் பணி ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு?- பேரூராட்சி அதிகாரியை அதிமுகவினர் முற்றுகை
திருப்போரூர் பேரூராட்சியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்து, அதிமுகவினர் செயல் அலுவலரை முற்றுகையிட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சியில் 15வார்டுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை அகற்றும் பணிகளை, பேரூராட்சி நிர்வாகம் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொண்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3joXtyb
via
No comments