Breaking News

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எச்ஐவி ஆய்வகத்தில் முறைகேடு- லஞ்ச ஒழிப்பு போலீஸில் பணியாளர்கள் புகார்

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட ஆய்வகம் அமைந்துள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஒருங்கிணைந்த கலந்தாய்வு மற்றும் பரிசோதனை ஆய்வகங்களில், எடுக்கப்படும் எச்ஐவி பரிசோதனை மாதிரிகள் அனைத்தும் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள ஆய்வகத்தில் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படும்.

அவ்வாறு பிற மாவட்டங்களில் இருந்து ரத்த மாதிரிகளை கொண்டுவரும், ஊழியர்களுக்கு பயணப்படி, பணிப்படி உள்ளிட்டவற்றை வழங்குவதற்காக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், ஆய்வகத்துக்கு வரும் ஊழியர்களுக்கு எந்தவித சலுகையும் வழங்காமல், போலியாக ரசீது காண்பித்து அந்த பணத்தை துறை அதிகாரிகள் பெற்றுக்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3goTMrn
via

No comments