Breaking News

சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவல்: விடுதலை செய்யக் கோரி பக்தர்கள் போராட்டம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி, அவரது பக்தர்கள் முட்டிபோட்டு கோஷமிட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வருகிறது சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி. இந்தப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் சிலர் போலீஸில் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், கடந்த ஜூன் 16-ம் தேதி புதுதில்லியில் இருந்த சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதுவரை இவர் மீது 3 போக்சோ வழக்குகள் போடப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tfFiPT
via

No comments