இந்தியாவில் ஆண்டுதோறும் புதிதாக 30 ஆயிரம் பேருக்கு கருவிழி பாதிப்பு: எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் தகவல்

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 36-வது தேசிய கண்தான இருவார விழா கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற விழாவில் கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி வடசென்னை தொகுதி எம்.பி. கலாநிதி வீராசாமி கவுரவித்தார். தொடர்ந்து மருத்துவ மற்றும் செவிலியர் மாணவ, மாணவிகளுக்கு கவிதை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38TcPpy
via
No comments