ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு 3 ஆயிரம் கிலோ ஹெராயின் கடத்தல்: கைதான சென்னை தம்பதிக்கு தலிபான்களுடன் தொடர்பா என தீவிர விசாரணை

குஜராத்தில் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில் கைதாகியுள்ள சென்னை தம்பதிக்கு ஆப்கன் தலிபான் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தமிழக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரத்தில் ஈரானின் பண்டார்அப்பாஸ் துறைமுகத்தில் இருந்துகுஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த 40 டன் எடையுள்ள கன்டெய்னர்களை அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். அப்போது, அதில் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.21 ஆயிரம்கோடி ஆகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lX8o3e
via
No comments