Breaking News

எல்லைகளை மாற்றும் பணி தீவிரம்: தமிழகத்தில் புதிதாக 50 பத்திர பதிவு அலுவலகங்கள்

பத்திரப்பதிவு அலுவலகங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுவதாகவும், இதன் மூலம் புதிதாக 50 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உருவாகும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் பதிவுத் துறையின்கீழ் 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவை சென்னை, மதுரை, கோவை உட்பட 9 மண்டலங்களில் 50பதிவு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 2020-21-ம் ஆண்டில் 26,95,650 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.10,643.08 கோடி வருமானம் கிடைத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CM8WzM
via

No comments