பழநி மலைக்கோயில் செல்ல நீண்ட இடைவெளிக்கு பின் ரோப்கார் இயக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி

பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப்கார் சேவை நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று முதல் தொடங்கியது. இதனால் பக்தர்கள் மூன்று நிமிடத்தில் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமிதரிசனம் செய்யமுடியும்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவைரயில், ரோப்கார் ஆகியவை உள்ளன. கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தநிலையில் இரண்டாம் அலையின் போது கோயில் மூடப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3l2T4BP
via
No comments