Breaking News

சென்னையில் மாணவிக்கு கரோனா தொற்று: தனியார் பள்ளியை ஒரு வாரம் மூட முடிவு

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், கடந்த 1-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதேசமயம், தமிழகம் முழுவதும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ha9U0m
via

No comments