கிராம ஆவணங்களில் மாற்றம் செய்த நிர்வாக அலுவலர்கள், உதவியாளர் பணியிடை நீக்கம்

கிராம ஆவணங்களில் மாற்றம் செய்த 2 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், காயார் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் மற்றும் தாம்பரம் கோட்டம், வண்டலூர் வட்டம், கொளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகா ஆகிய இருவர் கிராம அடங்கலில் தவறான தகவலை மாவட்ட நிர்வாகத்துக்கு பதிவு செய்தமையால், மாவட்ட நிர்வாகப் பணிகளில் குந்தகம் ஏற்படுத்தியதற்காக வருவாய் கோட்டாட்சியர்களின் உத்தரவின்படி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WOMtCI
via
No comments