Breaking News

ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் ஏன்?- நுகர்வோர் அமைப்பினர், பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கருத்து

ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் கட்டணம் மாறுபடுவது குறித்து நுகர்வோர் அமைப்பினர், பயிற்சி பள்ளிகளின் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 2,000 வாகன பயிற்சி பள்ளிகள் அரசு அனுமதியோடு இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் பயிற்சியாளர்கள், அலுவலக உதவியாளர் என பலர் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு அளிக்கப்படும் பயிற்சிக்கும், இதர சேவைகளுக்கும் ஒவ்வொரு பயிற்சி பள்ளியிலும் கட்டணம் மாறுபடுகிறது. இதுதொடர்பாக, கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலர் லோகு கூறும்போது, “தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம், உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு, அதற்கான கட்டணமும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தப்படுகிறது. ஆனால், பெரும்பாலான பொதுமக்கள் இடைத்தரகர் மூலமாகவும், பயிற்சி பள்ளிகள் மூலமாகவும் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து, கட்டணத்தை செலுத்துகின்றனர். போக்குவரத்து துறையால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான கட்டணத்தை போக்குவரத்து துறை நிர்ணயம் செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3EeUNMY
via

No comments