Breaking News

‘டான்செம்’ உற்பத்தியை அதிகரித்து சிமென்ட் விலை குறைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

அரசு சிமென்ட் உற்பத்தியை அதிகரித்து, சிமென்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சேலம் மேற்கு தொகுதி பாமக உறுப்பினர் அருள், ‘‘சிமென்ட் விலை உயர்வால் வீடுகளில் பராமரிப்பு பணிகளைக்கூட மேற்கொள்ள முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் சிமென்ட் விலைரூ.300 முதல் 360 என இருக்கும்போது, தமிழகத்தில் ரூ.490 வரைவிற்கப்படுகிறது. ஆலை அதிபர்கள் சிண்டிகேட் அமைத்து தினமும்விலையை உயர்த்தி வருகின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு டான்செம் சிமென்ட் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kQPoCV
via

No comments