Breaking News

நடப்பு ஆண்டில் ரூ.1,500 கோடி பட்டாசு உற்பத்தி சரிவு; வழக்குகளால் தத்தளிக்கும் தொழில்: லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கலக்கம்

கடந்த 2015-ம் ஆண்டு முதல் பல்வேறு வழக்குகளால் ஏற்பட்ட நெருக்கடியில் பட்டாசுத் தொழில் தத்தளித்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.1,500 கோடி அளவுக்கு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், உபதொழில்களான காகித ஆலைகள், அச்சுத் தொழில் உள்ளிட்டவற்றில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BTCFH0
via

No comments