9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியீடு; பெரும்பான்மை இடங்களில் திமுக வெற்றி: வாக்குச்சீட்டு முறை என்பதால் எண்ணும் பணி தாமதம்
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சில் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சில்களில் பெரும்பான்மை இடங்களை ஆளும் திமுக கைப்பற்றியுள்ளது. மேலும், அதிகப்படியான இடங்களில் முன் னிலை வகிக்கிறது. வாக்குச்சீட்டு முறை என்பதால் எண்ணும் பணி தாமத மாகியுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல் பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத் தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள் ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iZ65Mr
via
No comments