Breaking News

நடிகர் சிம்புவுக்கு எதிராக கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உஷா ராஜேந்தர் புகார்

நடிகர் சிம்புவுக்கு எதிராக கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாயார் உஷா ராஜேந்தர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். இவர் சிம்புவின் நடிப்பில், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தைத் தயாரித்தார். இந்த படம் தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில், சிம்பு தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாதபடி, ‘ரெட் கார்டு’ போடப்பட்டது. அதன்பின், சிம்புக்கு எதிரான ரெட் கார்ட் தடை நீக்கப்பட்டது. எனினும் இரு தரப்புக்குமான பிரச்சினை முடிவுக்கு வரவில்லை என கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pn2WKk
via

No comments