Breaking News

வேலூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடு; ஓட்டல்களில் உணவருந்த தடுப்பூசி கட்டாயம்: குமரியில் தடுப்பூசி சான்றை காட்டினால்தான் மது விற்பனை

வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தியோர் மட்டும் ஓட்டலில் அமர்ந்து சாப்பிட முடியும். குமரியில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க கரோனா தடுப்பூசி செலுதத்திய சான்று காட்ட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அங்குள்ள 6 பேரில் 4 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அருகில் உள்ள தின்பண்டக் கடையின் உரிமையாளர் தடுப்பூசி செலுத்தாமல் இருந்ததால், அந்தக் கடையைப் பூட்டினர். உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் திடீர் நடவடிக்கையால் ஓட்டல் உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3l9UUCf
via

No comments