கல்யாணராமன் கைதின்போது அத்துமீறல்: போலீஸ் அதிகாரிகள் மீது பாஜக பெண் நிர்வாகி புகார்

பாஜக பிரமுகர் கல்யாணராமன் கைது நடவடிக்கையின்போது போலீஸ் அதிகாரிகள் தகாத முறையில் நடந்து கொண்டதாக பாஜக பெண் நிர்வாகி புகார் கொடுத்துள்ளார்.
ட்விட்டரில் தொடர்ந்து சர்ச்சைகருத்துகளை பதிவிடுவதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பாஜகமாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை (55) கடந்த16-ம் தேதி நள்ளிரவு சென்னைவளசரவாக்கத்தில் உள்ள அவரதுவீட்டில் போலீஸார் கைது செய்தனர். அப்போது, போலீஸார் அடக்குமுறையுடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BT4RK9
via
No comments