Breaking News

மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக பங்காரு அடிகளார் மனைவி பொறுப்பேற்பு

மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக லட்சுமி பங்காரு அடிகளார் பொறுப்பேற்றார். இவர் போட்டியின்றி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக லட்சுமி பங்காரு அடிகளார் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற கட்டிடத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3C1y8T9
via

No comments