Breaking News

குப்பையைத் தரம் பிரித்து அளிக்க ‘பக்கெட் சிஸ்டம்’- கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தல்

அனைத்து வகை கடை உரிமையாளர்களும் நீலம் மற்றும் பச்சை வண்ண பக்கெட்டுகள் மூலமாக கட்டாயமாகக் குப்பையைத் தரம் பிரித்துக் கொடுக்கவேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

கோவை மாநகரின் 100 வார்டுகளிலும் நாள்தோறும் 800 முதல் 1000 டன் குப்பை சேகரமாகிறது. இவை லாரிகள் மூலமாக வெள்ளலூர் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன. குப்பையை பொதுமக்கள், கடைக்காரர்கள் தரம் பிரிக்காமல் கொட்டுவதால், இவற்றை தரம் பிரிக்கும்போது கூடுதல் பணிச்சுமை, நிதி விரயம் ஆகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Ylpctf
via

No comments