Breaking News

மதுவை அதிக விலைக்கு விற்றதாகக் கூறி ஒரகடத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு; ஊழியர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் 4109 என்ற பதிவு எண்கொண்ட டாஸ்மாக் கடை உள்ளது. இக்கடையில் வாலாஜாபாத் அடுத்த கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்த ராம்(40) மற்றும்ஒரகடம் அருகே உள்ள வாரணவாசியைச் சேர்ந்த துளசிதாஸ்(43) ஆகியோர் விற்பனையாளர்களாக பணியாற்றி வந்தனர்.

இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் மதுக்கடையை பூட்டிவிட்டு பைக்கில் செல்ல முயன்றபோது திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் இருவரையும் சரமாரியாக தாக்கியது. இந்தகத்திக் குத்தில் துளசிதாஸ் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார். ராமுபலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BfWmsl
via

No comments