Breaking News

தமிழகம், ஆந்திராவில் பெய்த தொடர் மழையால் காய்கறிகள் வரத்து குறைந்தது: தக்காளி கிலோ ரூ.150-க்கு மேல் விற்கப்படுவதால் மக்கள் அவதி

மழையின் காரணமாக வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. சில்லரை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.150-ஐக் கடந்துள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த தொடர்மழையின் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால், கோயம்பேடு மொத்தவியாபார சந்தையில் கடந்த வாரம்ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரைவிற்பனையான தக்காளி, சில தினங்களுக்கு முன்பு ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையானது. இதனால், சில்லரை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3l0i9On
via

No comments