Breaking News

திருச்சி அருகே விவசாயி கொலை; திமுக ஒன்றியச் செயலாளர், ரியல் எஸ்டேட் அதிபர் மீது வழக்கு: மேலும் 2 பேரை கைது செய்து விசாரணை

திருச்சி மாவட்டம் அல்லித்துறை அருகே மல்லியம்பத்து பகுதியில் உள்ள செங்கதிர் சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(50). விவசாயியான இவர் ரியல் எஸ்டேட்தொழில் செய்து வந்தார். இவரதுமனைவி மைதிலி. இத்தம்பதிக்குஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த வாரம் மல்லியம்பத்து ஊராட்சித் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள் செங்கதிர்சோலை கிராமத்தில் இருந்த மயான ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அந்த இடத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் தொடர்புடைய சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு கிடைக்காமல், அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியதற்கு சிவக்குமார்தான் முக்கியக் காரணம் என நினைத்த ரியல் எஸ்டேட் கும்பல், சிவக்குமாரிடம் கடந்த சில நாட்களாக பிரச்சினை செய்து வந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xFnqQD
via

No comments