Breaking News

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு 4-வது முறையாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது: தமிழக விவசாயிகள் கொண்டாட்டம்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, 4-வது முறையாக நேற்றிரவு 142 அடியை எட்டியதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1979-ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. அதன் பிறகு தொடர் சட்டப் போராட்டங்களின் பயனாக 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடியாக நிலைநிறுத்தலாம் என்றும் தீர்ப்புஅளித்தது. இதன்படி 2014, 2015, 2018-ம் ஆண்டுகளில் 3 முறை 142 அடி உயரத்துக்கு நீர்மட்டம் நிலைநிறுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3d8d0zr
via

No comments