Breaking News

கோவையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்த விவகாரம்; கேரளாவுக்கு விசாரணைக்கு சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு

கோவையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, கேரளாவுக்கு விசாரணைக்காக சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகள் நேற்று சிறை பிடிக்கப்பட்டனர்.

கோவை மதுக்கரையை அடுத்த நவக்கரை அருகே, நேற்று முன்தினம் இரவு 3 யானைகள் ரயில் மோதி உயிரிழந்தன. இதைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய ரயிலின் இன்ஜின் மாற்றப்பட்டு, புதிய இன்ஜின் பொருத்தப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் உதவிஓட்டுநர் ஆகியோரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்ததால், மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு, மாற்று ஓட்டுநர் மூலம் விரைவு ரயில் அங்கிருந்து சிறிது தாமதத்துக்கு பின்னர் புறப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rdJil5
via

No comments