Breaking News

‘சுயசார்பு பாரதம்: துடிப்பான, வலிமையான இந்தியா’ நூலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் குருமூர்த்தி வழங்கினார்: ‘விவேகானந்தா அகில உலக மையம்' வெளியீடு

விவேகானந்தா அகில உலக மையம் வெளியிட்டுள்ள ‘சுயசார்பு பாரதம்: துடிப்பான, வலிமையான இந்தியா' என்ற நூலை பிரதமர் மோடியிடம் பத்திரிகையாளர் குருமூர்த்தி நேரில் வழங்கினார்.

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடந்த 2020 மே 12-ம் தேதி ‘ஆத்மநிர்பர் பாரத்’ (சுயசார்பு பாரதம்) என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். உள்நாட்டு தொழில்கள், உள்நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். அதன்படி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3E7drpW
via

No comments