Breaking News

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது- தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் தேர்வு

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2020-ம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் உரிமையேற்றத்துக்கான தேசிய விருதுக்கு (National Award for the Empowerment of persons with Disabilities) தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த பணியாளர், சுயதொழில்புரியும் மாற்றுத் திறனாளி வகையில், பார்வைத் திறன் குறைபாடுஉடையவர் பிரிவில் சென்னைவேளச்சேரி ஏ.எம்.வேங்கடகிருஷ்ணன், திருவண்ணாமலை மாவட்டம் எஸ்.ஏழுமலை, அறிவுசார் குறைபாடு உடையவர் பிரிவில் காஞ்சிபுரம் கானாத்தூர் ரெட்டிக்குப்பம் கே.தினேஷ், பல்வகை குறைபாடு உடையவர் பிரிவில் திருச்சி மாவட்டம் மானக்சா தண்டபாணி ஆகியோர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31nGiaJ
via

No comments