Breaking News

வங்கக் கடலில் நவ.9-ல் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நவ. 11, 12-ல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு: மீனவர்கள் கரை திரும்ப உத்தரவு; முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

வங்கக் கடலில் வரும் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், வட தமிழக கடலோர மாவட்டங்களில் 11, 12-ம் தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் 9-ம் தேதிக்குள் கரை திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mPnv0f
via

No comments